தமிழாய்வுத்துறை - தமிழ் இலக்கியமன்ற விழா. தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சி கல்லூரியில் உள்ள தமிழாய்வுத் துறையில் தமிழ் இலக்கிய மன்ற விழா (03-09-2025) நண்பகல் 10.30 மணியளவில் நடைப்பெற்றது . ரோவர் கல்விக் குழுமங்களின் தாளார் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முதுமுனைவர் க.ரவிச்சந்திரன் அவர்கள் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் முனைவர் சீ.சிவக்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மொழிப்புல முதன்மையர் முனைவர் க.தமிழ்மாறன் அவர்கள் முன்னிலை வகித்தார். திரு ந.பன்னீர் செல்வம் அவர்கள் தமிழின் தொன்மை ,தமிழ் இலக்கியங்களின் பழமை, அகழாய்வு இடங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார். முன்னதாக தமிழாய்வுத் துறைத்தலைவர் முனைவர்சே.சுரேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியினை ந.மிதுவர்த்தினி முதுகலை மாணவி தொகுத்து அளித்தார். செ.ஜெயஸ்ரீ முதுகலை மாணவி நன்றிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் 70 மாணவர்கள் கலந்துக்கொண்டனர். தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சி.ராஜலெட்சுமி இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார் .